டெல்லி : நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது; சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், I.N.D.I.A. கூட்டணி உறுதி செய்யும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.