டெல்லி : கர்நாடகாவில் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா தரப்பு பதில் அளித்துள்ளது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 3.6 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விட தமிழ்நாடு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.