சென்னை: புழல் மகளிர் சிறையில் காவலர் சசிகலாவுக்கு பெண் கைதி கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைதான திரிபுராவை சேர்ந்த சலேமாகாதூன் என்பவர், பெண் காவலரை கீழே தள்ளி மிரட்டல் விடுத்துள்ளார். மாலை நேரத்தில் கைதிகளை அறையில் அடைக்கும்போது சிறை காவலரிடம் பெண் கைதி தகராறு செய்துள்ளார். கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.