Monday, May 6, 2024
Home » டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றியது அமெரிக்கா நாடாளுமன்றம்

டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றியது அமெரிக்கா நாடாளுமன்றம்

by Arun Kumar

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது

டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டாக் அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுதும் அரை பில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலி ஏற்கனவே அமெரிக்கத் தகவல்களைச் சீன சர்வர்களில் சேகரித்து வைப்பதை மறுத்துள்ளது.

இந்த செயலியின் தகவல் சேகரிப்பு மற்றும் தணிக்கை முறையைக் கொண்டு வட அமெரிக்காவில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிக்டாக் செயலி ரகசியமாகப் பயனாளர்களின் பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தனிநபரை அடையாளம் காணும் வகையான தகவல்களைச் சீனாவுக்கு அனுப்புகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அமெரிக்காவில் இருப்பவர்களை இப்போதோ அல்லது பிற்காலத்திலோ அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க உதவலாம் எனக் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்த மிஸ்டி ஹாங் என்னும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி தான் டிக்டாகை பதிவிறக்கம் செய்ததாகவும் அதில் எந்த கணக்கும் தொடங்கவில்லை என வழக்கில் குறிப்பிட்டிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய பெயரில் நிறுவனமே கணக்கு தொடங்கியிருந்ததாகவும் தான் பதிவிடாமல் வைத்திருந்த காணொளியை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை டன்செண்ட் மற்றும் அலிபாபா ஆகிய இரண்டு சீன சர்வர்களுக்கு அனுப்பியுள்ளனர். மிகப் பெரிய இலக்குடனும் விளம்பர வருவாய் மற்றும் இலாபங்களை” பெறத் தனியார் தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் டிக்டாக் நியாயமற்ற லாபத்தை ஈட்டுகிறது எனச் சட்டம் வாதிடுகிறது. மேலும் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான கோரிக்கைகளுக்கு டிக்டாக் உடனடியாக பதிலளிப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

திருத்தப்பட்ட சட்டம் டிக்டோக்கை விற்க பைட் டான்ஸுக்கு ஒன்பது மாதங்கள் காலக்கெடுவை நீட்டிக்கிறது, மேலும் விற்பனை நடந்து கொண்டிருந்தால் மூன்று மாதங்கள் நீட்டிக்க முடியும். இந்த மசோதா நிறுவனம் TikTok இன் ரகசிய சாஸைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்கும்.

 

You may also like

Leave a Comment

14 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi