சென்னை: தூய தாமஸ் கல்லூரியில்நடைபெறும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகளை கல்லூரி செயலர் பிஜூ சாக்கோ தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியானது, இன்று தொடங்கி வரும் 7ம்தேதி வரை என 3 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியின் தொடக்க விழா இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக கல்லூரி செயலர் பிஜூ சாக்கோ கலந்து கொண்டு கூடைப்பந்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் டி.எஸ்.பிரேமா தலைமை உரையாற்றினார். துணை முதல்வர் ப.ஜெயக்குமார், முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஷிபி மத்தாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் 18 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். உடற்கல்வி இயக்குனர்கள் முனைவர் டி.செல்வகணபதி, பேராசிரியர் வாணிஸ்ரீ ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.