பஞ்சாப்: பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பதிண்டா ராணுவ முகாமில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பதிண்டா ராணுவ முகாமில் இரு நாட்களுக்கு முன்பு 28 குண்டுகளுடன் துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.