புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சம்பா சாகுபடி விவசாயிகள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்யலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். பயிர் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். விரைவாக பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பில் இருந்து வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.