புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்திருவிழா தொடங்கியது. ஆளுநர் தமிழிசை,முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வீராம்பட்டினம் தேர் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வீராம்பட்டினம் தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சாமிதரிசனம் செய்தனர்.