Tuesday, May 21, 2024
Home » சென்னை மாதவரத்தில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறட்டம் மூலமாக நில அபகரிப்பு செய்த 4 நபர்கள் கைது

சென்னை மாதவரத்தில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறட்டம் மூலமாக நில அபகரிப்பு செய்த 4 நபர்கள் கைது

by MuthuKumar

சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறட்டம் மூலமாக நில அபகரிப்பு செய்த 4 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை அசோக்நகரை சேர்ந்த செல்விராதை என்பாருக்கு சொந்தமான மாதவரம் தணிகாச்சலம் நகரில் அமைந்துள்ள ரூ.4.5 கோடி மதிப்புள்ள சுமார் 4240 சதுர அடி கொண்ட காலி மனையானது தனது தாயார் யச்சையம்மாள் என்பாருக்கு பாத்தியப்பட்டது. என்றும் கடந்த 20.11.2015 அன்று தனது தாயார் இறந்துவிட்டதாகவும் அதன் பிறகு மேற்படி சொத்தானது தனது அனுபவத்தில் இருந்து வந்ததாகவும், இந்நிலையில் எதிரிகள் வசந்தகுமர் மற்றும் பலர் ஒன்றாக கூட்டு சதி செய்து மனுதரின் தாயார் யச்சையம்மாள் பொன்றே ஆள்மாறாட்டம் செய்து வசந்தகுமார் என்பவருக்கு அதிகாரம் வழங்கியது போல போலியாக ஆவணம் தயார் செய்தும், மேலும் பல்வேறு போலியான ஆவணங்களை உருவாக்கி நிலத்தினை அபகரித்து உள்ளனர். எனவே இது குறித்து ராதை என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிவே LFIW-II-ல் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வழக்கின் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில் எதிரிகள் ஒன்றாக கூட்டுச்சேர்ந்து ராதையின் தாயார் பச்சையம்மாள் போன்று ஆள்மாறாட்டம் செய்து அதன் மூலமாக போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடத்தை அபகரித்த பிறகு அதை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.1.5 கோடி கடன் பெற்று ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரியவருகிறது.

எனவே இந்த வழக்கில் தொடர்புடைய எதிர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் சாய் ரத்தோர், இ.காப ஆணைப்படி, கூடுதல் காவல் ஆணையாளர் P.K.செந்தில் குமரி இகாப மத்திய குற்றப்பிரிவு மேற்பார்வையில், காவல் துணை ஆணையார் S.ஆரோக்கியம் அறிவுறுத்தலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு. LPTW-II காவல் உதவி ஆணையாளர் ஃராஜாயால் தலைமையில் காவல் ஆய்வாளர் S.P.முருகேஸ்வரி மற்றும் காவல் குழுவினருடன் நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரிகள் 1. சகாதேவன், வ/48, த/பெ. நாகப்பன். மாதாரம், 2. குமார், வ/42, /பெ.ஜெயராமன் கொளத்தூர், 3. வடிவேல், வ/58, த/யெக்கிசோமி. மாதாவரம் மற்றும் 4. முத்துக்குமார், வ/43. த/பொய்பாயா ஆகியோர் 11.02.2024 அன்று கைது செய்து விசுபிக்க மேற்படி எதிரிகள் ஆள்மாறாட்டம் மூலமாக தயார் செய்த போலி ஆவணங்களை தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.1.5 கோடி முறையற்ற ஆதாயம் அடைந்துள்ளது. தெரியவந்தது.

கைது செய்யப்ப 4 நள்களும் நேற்று (11.08.2024) நீதிமன்றத்தில் ஆர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

nineteen − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi