சென்னை: சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டார் என எர்ணாவூர் நாராயணன் குற்றசாட்டு வைத்துள்ளார். நாடார் சமுதாய வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்புக்காக 2007ல் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. சரத்குமார் தேர்தல் நேரத்தில் பொருளாதாரத்துக்காக பதவிக்காக வருவார். தேர்தல் முடிந்தவுடன் சென்று விடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.