ஊட்டி: கிறிஸ்துமஸ் விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஊட்டியில் சான்டா கிளாஸ் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் மத்திய பேருந்து நிலையம், லோயர் பஜார், நகராட்சி சந்தை, கமர்சியல் சாலை, சேரிங் கிராஸ் உட்பட நகரின் முக்கிய வீதி வழியாக வந்தது.
மேலும் கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக உணர்த்தும் வகையில் வேடமிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் பாடல்களும் இசைக்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலம் தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது.