நெல்லை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள செந்தூர் விரைவு ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 300 பயணிகள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் சாலை உடைப்பால் 500 பேரை மீட்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்மழை, சாலை போக்குவரத்து துண்டிப்பால் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.