குஜராத்: குஜராத் காந்திநகரில் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துடிப்பான குஜராத் என்ற தலைப்பில் 10ஆவது உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கிவைக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் குஜராத் உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும். 16 அமைப்புகளும் பங்கேற்றுள்ளது. முன்னணி உலகளாவிய நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.