திருப்பூர்: பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.
ஜூலை 28ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். தொடர்ந்து, பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் நாளையும் என் மண் என் மக்கள் பிரசார நடைப்பயணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 18ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.