சென்னை: பிரதமருக்குதான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டு போகிறார் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் திட்டத்தில் பாஜக நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் வெளியாகி உள்ளது எனவும் பெண் சக்திகளை பற்றி பேசிய பிரதமர், மணிப்பூர் சம்பவம் குறித்து பேசாதது ஏன்?, “பிரதமர் மோடி, மணிப்பூருக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறினாரா? போன்ற கேள்விகளையும் டி.ஆர்.பாலு எழுப்பினார்.