10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு
சென்னை: திமுக இளைஞரணியின் மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
* சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* பொதுவெளியில் சமூக நீதிக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் செயல்படுவதாக ஆளுநரை கண்டித்து நிறைவேறியது.
* மணிப்பூர் கொடூரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பிரதமர், ஒன்றிய அரசை கண்டித்தும் தீர்மானம். மணிப்பூர் கொடூரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, போலித்தனமாக ஊடகங்கள் முன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் .
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
* கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவும் திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்.
* இளம் பேச்சாளர்களை அடையாளம் காண மாவட்டந்தோறும் திராவிட மாடல் பயிற்சி வகுப்புகளை நடத்த தீர்மானம்.
* தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே பணி வழங்க வலியுறுத்தி தீர்மானம்
திமுக, இளைஞரணியின் மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்: உதயநிதி ஸ்டாலின்