டெல்லி: வெறுப்புப் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக குவிந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே 20,000-க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலம் புகார் மனு சென்றுள்ளது. மேலும், வெறுப்பை பரப்பும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கனவே புகார் அளித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.