டெல்லி: தமிழ்நாட்டில் அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்கள் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ச்சகர் மற்றும் கோயில் பணியாளர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2020 செப்டம்பரில் அரசாணை வெளியிட்டது. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிநாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.