அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2018-19-ம் நிதியாண்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடம் கட்டியதாக ரூ.17 லட்சம் முறைகேடு செய்ததாகவும் புதிதாக கட்டடமே கட்டாமல் ஏற்கனவே இருந்த கட்டடத்தை சீரமைத்துவிட்டு புதிதாக கட்டியதுபோல் கணக்கு காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதால் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.