டெல்லி: இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் தொடர்பாக இருவரும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேசுகிறார்.