வாடிகன்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு இயேசு என்று பெயரிடும் விழா புத்தாண்டாகவும் அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு திருக்காட்சி பெருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளிட்ட 16 குழந்தைகளுக்கு நேற்று ஞானஸ்நானம் வழங்கினார். அப்போது அவரது சொற்பொழிவில், ‘’ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவுக்குள் அவர்கள் பிறப்பதால், அதுவொரு பிறந்த நாளாகும். இந்நாள் கொண்டாடப்பட வேண்டியது. இதனை பிள்ளைகளுக்கு கூறி வளருங்கள்,’’ என்று போதித்தார்.
திருக்காட்சி பெருவிழாவில் குழந்தைகளுக்கு போப் ஞானஸ்நானம்
previous post