உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சேந்தநாடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. அதில், இளவட்ட கல் தூக்கும் போட்டியில் அந்த கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் பிரபு (29) என்பவர் இளவட்ட கல்லை தூக்கினார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த போது இளவட்ட கல் அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.