சென்னை: சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்ட செந்தில் குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இஸ்லாமிய ஊழியர் ஒருவரை விசாரிக்க வேண்டும் என வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். ரயில் விபத்து தொடர்பாக சாதி, மத ரீதியாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்து இருந்தது.