Thursday, May 16, 2024
Home » தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை, சான்றிதழ்

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை, சான்றிதழ்

by Ranjith

திருவள்ளூர்: தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் நடந்த கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டி வெற்றிப் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் கலெக்டர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருவள்ளூர், மணவாளநகர், கே.இ.நடேச செட்டியார் அரசு மேனிலைப் பள்ளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

பரிசுப்பெற்ற மாணவர்களின் விவரங்கள் பின்வருமாறு, கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பொன்னேரி, உலகநாத நாராயணசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மு.டி.ஒலிம்பா பிரியதர்ஷினி, 2ம் பரிசு ரூ.7,000 ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி ப.சிவபிரகதீஷ், 3ம் பரிசு ரூ.5,000 ஆவடி, பருத்திப்பட்டு, மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மு.பூஜா பெற்றுள்ளனர்.

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பட்டாபிராம், தர்ம மூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி செ.பிரியதர்ஷினி, 2ம் பரிசு ரூ.7,000 வெள்ளாத்தூர், சி.மா.அண்ணாமலை அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி தா.சி.மேனகா, 3ம் பரிசு ரூ.5,000 நூம்பல், சிந்திக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரா.தேவி, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 திருப்பாச்சூர், திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி இர.உஷாராணி, 2ம் பரிசு ரூ.7,000 பட்டாபிராம், தர்ம மூர்த்தி இராவ் பகதூர் கலவலக் கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி மூ.ரஞ்சிதா, 3ம் பரிசு ரூ.5,000 மதனகுப்பம், சோகா இகெதா கல்லூரி உ.ஹாபிசா பெற்றனர்.

இதேபோல், பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 வெங்கல், அரசு மேனிலைப்பள்ளி அ.ஷம்மா மிரியாம் ரோஸ், 2ம் பரிசு ரூ.7,000 நாரவாரிக்குப்பம், காசி பாலசுப்பிரமணிய செட்டியார் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி சி.மதுமிதா, 3ம் பரிசு ரூ.5,000 அம்மையார்குப்பம், ஆசிரியர் மங்களங்கிழார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி வ.இர.இளமதி பெற்றுள்ளனர்.

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 மணவாள நகர், கே.இ.நடேச செட்டியார் மேனிலைப் பள்ளி ச.கவிதா, 2ம் பரிசு ரூ.7,000 ஆவடி, காமராஜ நகர், அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி த.இராஜலஷ்மி, 3ம் பரிசுத்தொகை ரூ.5,000 செவ்வாப்பேட்டை, அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் மேனிலைப் பள்ளி மு.பாக்கியலட்சுமி, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 கத்திவாக்கம், அரசு மேனிலைப் பள்ளி சூ.கமலக்கண்ணன், 2ம் பரிசு ரூ.7,000 திருவள்ளூர், ராஜ்மல் மிஸரிலால் ஜெயின் மகளிர் மேனிலை பள்ளி இரா.காயத்ரி, 3ம் பரிசு ரூ.5,000 திருநின்றவூர், தாசர் அரசு உதவிபெறும் மேனிலைப் பள்ளி கு.முத்துஅபி பெற்றனர்.

You may also like

Leave a Comment

10 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi