Saturday, May 11, 2024
Home » புழல் சிறையில் அடைக்கப்பட்ட 2 போக்சோ குற்றவாளிகள் பலி

புழல் சிறையில் அடைக்கப்பட்ட 2 போக்சோ குற்றவாளிகள் பலி

by Suresh

புழல்: புழல் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 2 கைதிகள், நேற்று முன்தினம் இரவு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை பிரிவில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோட்டூர், சூர்யா நகர் மேற்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் (82) என்பவரை மயிலாப்பூர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து, டிசம்பர் மாதம் இந்த விசாரணை பிரிவு சிறையில் அடைத்தனர். மூளைக்கட்டியால் அவதிப்பட்ட மாணிக்கத்தை, ஏப்ரல் 23ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதேபோல் பண்ருட்டி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி (40). இவரை பண்ருட்டி போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் பிரச்னைக்கு, சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் 14ம் தேதி புழல் சிறைக்கு ராஜிவ்காந்தி மாற்றப்பட்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உடல்நலக் குறைவால் 2 கைதிகள் சிகிச்சை பலனின்றி ஒரே நாள் இரவில் இறந்த சம்பவம் புழல் சிறையில் இருக்கும் பிற கைதிகளிடையே பெரும் பதற்றத்ைத ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

three × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi