ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவு நீரை வெளியேற்றிய ஜவுளி ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஜவுளி ஆலை கழிவுநீரை வெளியேற்றியதை கடந்த 29ம் தேதி கண்டறிந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மக்களின் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட ஜவுளி ஆலையின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.