ஜம்மு: இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான அமர்நாத் யாத்திரை ஒன்றாம் தேதி தொடங்கியது.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்காம் , கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகள் வழியாக பக்தர்கள் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். பாகல்காம் பாதையில் 3,030 பேரும், பால்டால் பாதையில் 1,728 பேரும் நேற்று அதிகாலை யாத்திரையை தொடங்கினார்கள். நேற்று காலை வரை 20 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனத்தை செய்துள்ளனர்.