Friday, April 26, 2024
Home » அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இந்திய பெண் இன்ஜினியர் உட்பட 8 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இந்திய பெண் இன்ஜினியர் உட்பட 8 பேர் பரிதாப பலி

by Ranjith

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 33 வயதான மொரிசியோ கார்சியா என்ற நபர் வணிக வளாகத்தில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து விரைந்த போலீசார், கொலையாளி மொரிசியோவை சுட்டுக் கொன்றனர். இதில் பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதான பெண் இன்ஜினியரும் ஒருவர் என்ற தகவலை போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தடிகொண்டா இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார். மெக்கென்னி நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் புராஜெக்ட் இன்ஜினியராக பணியாற்றிய ஐஸ்வர்யா ஐதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் போனில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்தான் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அவருடன் வந்திருந்த ஆண் நண்பர் காயமடைந்தார். இவரது தந்தை தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆவார். பலியான ஐஸ்வர்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi