Wednesday, May 15, 2024
Home » தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

by Ranjith

மதுரை: கடந்த 2011 ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் சுவாமி கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். அப்போது, தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக கீழவளவு காவல்நிலையத்தில், அவர் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 21 பேரில் 4 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பிஎம் மன்னன் உள்ளிட்ட 17 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi