டெல்லி : நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் மக்களை பிரதமர் மோடி திசை திருப்புவதாக கே.சி.வேணுகோபால் புகார் தெரிவித்துள்ளார். பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் வறுமை, விலையேற்றம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி முதல் பதில் அளிக்கவேண்டும் எனவும் கூறினார்.