சென்னை : சென்னை அடுத்த பட்டரவாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் 60 பேர் மீது பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதியப்பட்டுள்ளது. பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.