சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கம், காஷ்மீர், பீகார் மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்த 7பேர் கைது செய்யப்பட்டனர். வாகன சோதனையில் இருவர் கைதான நிலையில் அவர்கள் அளித்த தகவலில் மேலும் 5பேர் கைதாகினர்.