சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டோகால், அலுவலக நிர்வாகம், வாகனம், வீடியோ வேனுக்கு தனித்தனி குழுக்கள் அமைக்கபட்டுள்ளது. பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும் உரையை அச்சிட தனி குழுவும், மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழுக்கள் அமைக்கபட்டுள்ளது.