திண்டிவனம் : திண்டிவனம் அருகே முன்னால் சென்ற மினி வேன் மீது பைக் மோதிய விபத்தில் போலீசார் காயமடைந்தார்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலை காரணமாக பைக்கில் சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஓங்கூர் குபேரன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மினி வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காவலர் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.