சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூர் பகுதிக்கு வந்த துணை ராணுவனத்தினர் போலீசாருடன் சேர்ந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லுார், உள்ளகரம், புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் தேர்தலின்போது அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு பேரணியை நேற்று நடத்தினர். பேண்டு வாத்திய முழக்கத்துடன் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி கம்பீர நடை போட்டனர்.