தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தில் திருவிழா நடத்த கோயில் கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஜோதியை கொண்டுவருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தளர்த்தியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விழாவையொட்டி 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.