திருப்பூர் : பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில் பல்லடம் படுகொலை சம்பவம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறால் நடந்துள்ளது என்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1.5கி.மீ. தொலைவில் குற்றவாளிகள் வசித்து வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.