திண்டுக்கல் : பழனி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.