இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். நாளை மறுநாள் முதல் 16ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாக். நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து
previous post