இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் மூன்று முறை பிரதமரான நவாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி நேற்று பிரதமர் வேட்பாளராக கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியை அறிவித்துள்ளது.
மேலும் அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் அதிகாரிகளை பாகிஸ்தான் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே முன்னாள் பிரதமர் இம்ரானின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் மார்வட்டை போலீசார் கைது செய்தனர்.