நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது. 2ம் கட்ட ஆய்விற்காக நெல்லை மாவட்டத்திற்கு 7 பேர் கொண்ட 2 ஒன்றிய குழுக்கள் வந்துள்ளன. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒன்றிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலை, நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அதிகாரிகள் கேட்டறிந்தனர்.