சென்னை: உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.295 கோடியில் 1,674 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கிட 1,674 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. ஊரகப்பகுதி வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அரசின் நோக்கத்தை அடைவதில் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.