இத்தாலியில் நடைபெற்ற ஆடை கண்காட்சியில் 1980 காலகட்டத்தில் பயன்படுத்திய ஆடைகளை அணிந்து மடல் அழகிகள் ஒய்யார நடை போட்டதை பார்வையாளர்கள் மெய்மறந்து ரசித்தனர். இத்தாலி மிலன் நகரில் ஆடை அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில் 1980களில் லண்டனில் பயன்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட ஆடைகளை மாடல்கள் அணிந்திருந்தனர். பின்னர் கண்காட்சி தொடங்கியதும் ஒய்யாரமாக நடந்து வந்த மாடல் அழகிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.