ஒசூர்: ஒசூர் அருகே அஞ்செட்டியில் வனத்துறை அலுவலகத்தை சூறையாடி கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர். அட்டப்பலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (45) என்பவர் நேற்று இரவு வனப்பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். வெங்கடேஷ் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் கிடந்த வெங்கடேஷ் உடலை மீட்ட அஞ்செட்டி வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.