Thursday, May 16, 2024
Home » 72வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங், தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் வாழ்த்து: காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

72வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங், தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் வாழ்த்து: காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

by Dhanush Kumar

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில், “ அருமைச் சகோதரர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் திக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொது செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர் எம்பி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினர். காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 72 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினர். மாநில பொது செயலாளர் தளபதி பாஸ்கர் முன்னிலை வகித்தார். விழாவில் துணை தலைவர்கள் பொன்கிருஷ்ணமூர்த்தி, உ.பலராமன், மாநில பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, பி.வி.தமிழ்செல்வன், மகளிர் அணி தலைவர் சுதா, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, இலக்கிய அணி தலைவர் புத்தன், கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகர், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர், அகராவரம் கே.பாஸ்கர், எஸ்.ரஞ்சித் குமார், அயன்புரம் கே.சரவணன், ஓ.வி.ஆர்.ரஞ்சித் குமார், முனிஸ்வர்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை புதுப்பேட்டையில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.கே.உமாபாலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் பங்கேற்று கேக்கினை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, நலிந்த காங்கிரசார் 36 பேருக்கு தலா ரூ.5000, பெண் ஒருவருக்கு மகப்பேறு செலவாக ரூ.40,000, நலிந்த பெண் ஒருவரின் மகன் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10,000 நிதி என மொத்தம் ரூ.3.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் ஜாபர், நரேஷ், சூர்யா, ஐயப்பன், ஜான்சன், சக்ரவர்த்தி, ரியாஸ், முரளி கிருஷ்ணா, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல காங்கிரஸ் எஸ்.சி.துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

12 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi