லக்னோ: உபியில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற பிறகு பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. முகல் சாராய் என்ற இடத்தின் பெயர் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா நகர் என்றும், அலகாபாத் பெயர் பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் பெயர் அயோத்தி என்றும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வரிசையில் அலிகார் பெயர் இனிமேல் ஹரிகார் என்று மாற்றப்பட உள்ளது. இதற்கான அனுமதி அலிகார் நகர மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையிலான கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆக்ரா பெயரை அக்ராவன் அல்லது அகர்வால் என்று மாற்றவும், முசாபர்நகர் பெயரை லட்சுமி நகர் என்று மாற்றவும் உபி அரசு திட்டமிட்டு உள்ளது.