சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவந்தால் ஜனநாயக மாண்பை சீர்குலைத்து அதிபர் ஆட்சி முறைக்கு வித்திடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறு வழி இல்லை. பாஜக கொண்டு வருவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அதிமுக ஆதரிக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் துறை சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.