சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பற்றி பாட்டாளி மக்கள் கட்சி தனது கருத்தை தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிகவும் வலுசேர்ப்பதாக இருக்கும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த உயர்நிலைக் குழு பரிந்துரைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.