செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சாலை விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த ஒழையூர் பகுதியை சேர்ந்தவர் மதுரை (60). இவரது மனைவி கோவிந்தம்மாள் (57). இவர் தனது மகள் வீட்டிற்க்கு செல்ல கடந்த 18ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே சாலையை கடந்து அண்ணாநகர் சென்றார். அப்போது அதிவேகமாக வந்த பைக் மோதி கோவிந்தம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் கோவிந்தம்மாளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனையல் சேர்த்தனர்.அங்கு கோவிந்தம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார். புகாரின்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து, கோவிந்தமாள் உடலை அதே மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.