திருச்சி: திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பால பணிகள் நிறைவு பெற்று வரும் 29ல் திறக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகளை நிறைவு செய்ய பாதுகாப்புத்துறை கடந்த மே மாதம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 66 செண்ட் நிலத்திற்கு பாதுகாப்புத்துறை அனுமதி தராமல் இருந்து வந்தது. அனுமதி வழங்கியதை அடுத்து தடைபட்டு கிடந்த கட்டுமான பணிகளை கடந்த மே மாதத்தில் அரசு தொடங்கியது.